விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் இருவர் காயம்

விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் இருவர் காயம்
இரு டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்
விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் பட்டம்புதூர் சார்ந்தவர் பாலமுருகன் இவர் தனது மருமகன் நாகமுத்து என்பவர் உடன் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் செங்குன்றாபுரம் நாகம்மாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது விருதுநகர் காசுக்கடை பஜாரை சார்ந்தவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பாலமுருகன் மற்றும் அவருடைய மருமகன் இருவருமே காயம் அடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆபத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story