இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயம்

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயம்
காவல்துறை விசாரணை 
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயம்
விருதுநகர் பரங்கியநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் விஜய சந்திரன் வயது 44 . இவர் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 20ஆம் தேதி இரவு மேலத்தெருவில் தனது மகளை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது விருதுநகர் சந்திரகிரிபுரத்தை சார்ந்த விக்னேஷ் என்ற 19 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து விஜயசந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விஜயசந்திரன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து விஜயசந்திரன் அளித்த புகாரியின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story