வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பியோடிய இரு இளம் சிறார்கள் கைது

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பியோடிய இரு இளம் சிறார்கள் கைது

காவல்துறை

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பி ஓடிய இருவரை போலீசார் கோயம்புத்தூரில் பிடித்துள்ளனர் .
வேலூர் காகிதப்பட்டறையில் ஆட்சியர் அலுவலகம் எதிரே சமூகப் பாதுகாப்புத்துறைக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இடத்தில், குற்றங்களில் ஈடுபட்ட 30 இளஞ்சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வழக்கம்போல கடந்த 24ம் தேதி மாலை வேளையில் இளம் சிறார்கள் பாதுகாப்பு இடத்தில் உள்ள காலியான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்சிறார் மற்றும் கோவையைச் சேர்ந்த 18 வயது இளம் சிறார் ஆகிய இருவரும் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றனர். தப்பிச்சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த இளம் சிறாரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் பிடித்துள்ளனர். விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த இளம் சிறாரை செல்போன் திருட்டு வழக்கில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

Tags

Next Story