மின் கம்பத்தில் பைக் மோதி கபடி வீரர்கள் இருவர் பலி

சீர்காழி அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து 2 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிர் ஊசல். போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24) உள்ளிட்ட மூன்று பேரும் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை வந்துள்ளனர். அப்பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ராதாநல்லூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இதில் மின்கம்பம் முற்றிலும் உடைந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த காளிதாஸ்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தா நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் இரண்டு பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மேலும் இந்தவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சின்னங்குடி பகுதியில் நடைபெற்று வரும் இரவு நேர கபடி போட்டியில்பங்கேற்றுவிட்டு மூன்று பேரும் சென்றதாகவும் இந்நிலையில் இன்று அதிகாலை சின்னங்குடி பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊரான திருமுல்லைவாசல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Tags

Next Story