மோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் பலி

மோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் பலி

விபத்து

திருச்சி துறையூர் சாலையில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை வடக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான செந்தில்.இவரது உறவுக்காரர் திருவெள்ளறை ஊராட்சி காளவாய்ப் பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான கணேசன். இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் பைக்கை செந்தில் ஓட்டிச் சென்றுள்ளார்.

அதேபோல் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் 19 வயதான முகமது நௌசத் அலி. இவரது நண்பர் புலிவலம் லட்சுமி நகரை சேர்ந்த 22 வயதான பிஜிருல்லா. இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் பைக்கை முகமது நௌசத் அலி ஓட்டிச் சென்றுள்ளார்.இந்நிலையில் பெரமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் மோட்டார் பைக்குகளில் வந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முகமது நௌசத் அலி மற்றும் பிஜிருல்லா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த கணேசன் மற்றும் செந்தில் ஆகியோர் உடலை புலிவலம் போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story