ஓமலூர் அருகே இருவேறு விபத்தில் இருவர் பலி

காமலாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கார் மோதியதில் சங்கர் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி புதுபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் சங்கர், அங்கப்பன் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் குமரேசன் ஆகியோர் காமலாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அதே திசையை நோக்கி வந்த ஒரு கார் அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் சங்கர் என்பவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் பூசாரிபட்டியில் ஆட்டோ மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் நாச்சனம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ஆண்டியப்பண் மகன் சீனி பரிதாபமாக உயிரிழப்பு. ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story