இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு !

எடப்பாடி அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலி. போலீசார் விசாரணை
எடப்பாடி அருகே ஆலமரத்துக்காடு பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இருவர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாகவும் இதற்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்தின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் வீரப்பம்பாளையம் முதல் ஆலச்சம்பாளையம் வரை சுற்று புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே எடப்பாடி போடிநாயக்கன்பட்டி சாமுண்டி வளவு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபர் அதிக திறன் கொண்ட KTM இருசக்கர வாகனத்தில் சுற்றுபுற வழிச்சாலை ஆலமரத்துக்காடு அருகே அதி வேகமாக சென்ற போது குறுக்கு சாலையிலிருந்து மற்றொரு (யமாகா கிரக்ஸ்)இருசக்கர வாகனத்தில் கொங்கணாபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் (52) சுற்றுபுறவழிச்சாலைக்குள் நுழைந்த போது இரண்டு இரு சக்கர வாகனமும் மோதிவிபத்துக்குள்ளாகி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஸ்வநாதனின் சடலத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும் கவலைக்கிடமான நிலையில் கிடந்த வெங்கடேசனை சேலம் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்ததில் வெங்கடேசும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே ஆலமரத்துக்காடு பகுதியில் அடிக்கடி இது போன்ற சாலை விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அனைவரிடத்திலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். மேலும் இந்த சாலை விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த இச்சசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story