சாராயம் விற்ற 2 பேர் கைது - 20 லிட்டர் சாராயம் பறிமுதல்
![சாராயம் விற்ற 2 பேர் கைது - 20 லிட்டர் சாராயம் பறிமுதல் சாராயம் விற்ற 2 பேர் கைது - 20 லிட்டர் சாராயம் பறிமுதல்](https://king24x7.com/h-upload/2024/05/01/495819-109159483058f3942-9111-48aa-a8e1-8d675fa04e5f-copy-2.webp)
பைல் படம்
சங்கராபுரம் பகுதியில் கள்ளசாராயம் விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற ராஜேந்திரன் மனைவி எலகாந்தம், 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார். இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சாராயம் விற்ற ரமேஷ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.
Next Story