விருத்தாசலம்: இரண்டு சிறுமிகள் மாயம்

விருத்தாசலம்: இரண்டு சிறுமிகள் மாயம்

வழக்குப் பதிவு 

விருத்தாசலம் அருகே இரண்டு சிறுமிகள் மாயமானதை அடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், அண்ணா நகரை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரின் 15 வயது மகள், செல்வராஜ் என்பவரின் 16 வயது மகள் இருவரும் 8 வது மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்குள்ள கடையில் வேலைக்கு சென்று வந்தனர். கடந்த 27 ஆம் தேதி இருவரும் வேலைக்கு செல்லவில்லை என இருவரின் தாயாரும் கண்டித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு இருவரும் வீட்டிலிருந்து மாயமாகினர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story