பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரண்டு ஆண் சடலங்கள் மீட்பு

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரண்டு ஆண் சடலங்கள் மீட்பு

சடலங்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆண் சடலங்கள் மிதப்பதாக செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதை அடுத்து, பள்ளிபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது ஈரோடு எல்லை பகுதிக்கு உட்பட்ட காவிரி ஆற்றங்கரையில் சடலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிபாளையம் ஜனதா நகர் பகுதிக்கு விரைந்த கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், உள்ளூர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் பள்ளிப்பாளையம் காவிரி பாலத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அழுகிய நிலையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலத்தையும், பள்ளிப்பாளையம் ரயில்வே இருப்புப் பாதை பாலம் தாண்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் முதிய வயதில் ஒரு ஆண் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றல் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story