பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி பணத்தை பறித்து சென்ற இருவர் கைது

பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி பணத்தை பறித்து சென்ற இருவர் கைது

கைது

குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி பணத்தை பறித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் கிருஷ்ணன். சம்பவத்தன்று கோவைப்புதூர் மகாத்மா காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்கனவே பரிச்சயமான மைல்கல் பகுதியை சேர்ந்த நிசாருதீன் மற்றும் கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த நவாஸ் ஆகியோர் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர்.தன்னிடம் பணம் இல்லை என செந்தில் கிருஷ்ணன் கூறிய நிலையில் அருகில் இருந்த பீர்பாடலை எடுத்து உடைத்து செந்தில் கிருஷ்ணனின் வயிற்றில் வைத்து மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 400 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.

செந்தில் கிருஷ்ணன் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வந்த நிலையில் அவர்களையும் பீர் பாட்டிலை காண்பித்து மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டதன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நிசாருதீன் மற்றும் நவாஸ் இருவரையும் கைது செய்து 400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story