பாஜக பெண் பிரமுகரின் கணவர் வழக்கில் மேலும் இருவர் ஆஜர் !

பாஜக பெண் பிரமுகரின் கணவர் வழக்கில் மேலும் இருவர் ஆஜர் !

பாஜக

பாஜக பெண் பிரமுகரின் கணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் சரண் அடைந்துள்ளனர்.
பாஜக பெண் பிரமுகரின் கணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் சரணடைந்தனர். சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி நதியாவின் கணவர் சீனிவாசன் கடந்த 14 ஆம் தேதி ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாலாஜி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு நபர் கார்த்திகேயன் என்ற சின்ன அப்பு திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் உட்பட ஐந்து பேர் மறுநாளே சரணடைந்தனர்.பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story