லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

துவாக்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
துவாக்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக துவாக்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்.அப்போது துவாக்குடி வாழவந்தான் கோட்டை கல்லுப்பட்டறை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த துவாக்குடி பொன்னகர், புது காலனியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் வாழவந்தான் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்த தனபால் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் இரண்டு செல்போன்கள் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story