குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

மானாமதுரை அருகே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கிளங்காட்டூரைச் சேர்ந்த ராசையா (எ) மணிகண்டன் (29) கொலை வழக்கிலும், பரமக்குடி அருகே ஏனாதிக்கோட்டையைச் சேர்ந்த துரைசிங்கம் (20) என்பவர் கொலை முயற்சி வழக்கிலும் மானாமதுரை போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிவகங்கை எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் பரிந்துரையில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார். இதையடுத்து, மானாமதுரை போலீஸார் இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story