பைக் மீது வாகனம் மோதியதில் இருவர் பலி

பைக் மீது வாகனம் மோதியதில் இருவர் பலி

பைக் மீது வாகனம் மோதியதில் இருவர் பலி

கோபால்பட்டி அருகே செம்மேடு குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, அன்பழகன். இவர்கள் நேற்று காலை 7:00 மணிக்கு டூவீலரில் நத்தம் நெடுஞ்சாலையில் சென்றனர். பனிமூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. கணவாய்ப்பட்டி மேட்டுப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க வர தாமதம் ஆனது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வர இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியிலேயே இருவரும் இறந்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story