சாலை விபத்தில் குமரியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு !

சாலை விபத்தில் குமரியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு !

இருவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த வாலிபர்கள் தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தார்.

குமரி மாவட்ட தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின். இவருக்கு சொந்தமாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் என்பவரும், மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த ஜெயசந்திர சேகர் என்ற சதீஷ் என்பவரும் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஷைபின் பாஸ்போர்ட் புதுப்பிக்க சொகுசு காரில் ஷைபின், ஜெயசந்திரசேகர் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில் வேகமாக மோதினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசந்திர சேகரும், ஷைபினும் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

மேலும் இது குறித்து விபத்தில் பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திரசேகர் ஆகியோரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் உடல்கள் நாளை 27-ந்தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் 28-ந்தேதி அவர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags

Next Story