மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது

மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது
மதுவிற்பனை
தொப்பூர் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக தொப்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொப்பூர் காவலர்கள் நேற்று பாளையம்புதூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவருடைய வீட்டில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் ஜருகு பகுதியில் உள்ள வீட்டில் மதுபாட்டில் .பதுக்கி விற்பனை செய்த முருகன் என்பவரை கைது செய்த காவலர்கள் அவரிடம் இருந்த 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story