நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலையில்  இரண்டு பேர் கைது

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலையில்  இரண்டு பேர் கைது
கைதானோர்
கன்னியாகுமரியில் நாதக நிர்வாகி கொலை வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகேயுள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார். நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவராக இருந்து வந்த இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள கிறிஸ்தவ ஆலய பிரச்சனை தொடர்பாக பாதிரியார் இல்லத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார்.இது சம்பந்தமாக திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐந்து தனிப்படையினர் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ் ரோக் மற்றும் வின்சென்ட் ஆகியோரை கருங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் ஏறி செல்ல முயன்ற போது இரணியல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் ,கொலையில் ஈடுபட்டவர்கள் யார் யார்? அவர்கள் எல்லாம் தற்போது எங்கு உள்ளார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story