காளைகள் முட்டி இருவர் பலி

காளைகள் முட்டி இருவர் பலி

 சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர் மாங்குடி முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மேலும், இப்பணியில் 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 1,000 காவலர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கட்டுமாடு அவிழ்கப்பட்டதில் ராகுல்(11) என்ற சிறுவன் மாடு முட்டியதில் பலியானார். மேலும் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் பலியாகியுள்ளார். இதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Tags

Next Story