செம்மண் கடத்திய இருவர் கைது

செம்மண் கடத்திய இருவர் கைது
பைல் படம்
பளுகல் அருகே செம்மண் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சிலர் அனுமதியின்றி செம்மண்ணை வாகனங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளிக் கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் (33),சுஜித் (35) என்று தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story