லாட்டரிவிற்ற இரண்டு பேர் கைது!

லாட்டரிவிற்ற இரண்டு பேர் கைது!

கோப்பு படம் 

லாட்டரிவிற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்பியின் தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கொடும்பாளூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு மோத்தப்பட்டியை சேர்ந்த தங்க வேல்(34), வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி (29) ஆகிய இருவரும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து விராலிமலை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.`

Tags

Next Story