செங்கல்பட்டு: நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு: நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கோப்பு படம்

கிழக்கு கடற்கரை சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி கிழக்கு சாலை வழியாக இனோவா கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.அதில் புதுச்சேரி நோணாங்குப்பத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வம் மற்றும் 3 பேர் பயணித்தனர்.சொந்த வேலை காரணமாக சென்னை சென்று திரும்பிய இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம்,வெண்ணாங்குபட்டு பகுதியை கடக்கும் போது அங்கு கிழக்கு கடற்கரை சாலை 4 வழிபாதை அமைக்கும் பணி நடைபெறுவதை கவனிக்காமல் வேகமாக வந்த போது மாற்று பாதையில் திருப்ப முடியாமல் கார் தடுப்பு மணல் மூட்டைகள் மீது மோதி அருகே இருந்த பள்ளத்திற்குள் பாய்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் செல்வம் இறந்தார்.அவரது உடல் அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமுவேல் மிக கவலைக்கிடமாக வகையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் இறந்தார். காரில் பயணித்த மேலும் இரண்டு பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சூனாம்பேடு போலீசார் அங்கு கிடைத்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story