நன்னிலம் அருகே இருவர் கைது

நன்னிலம் அருகே இருவர் கைது

அருவா

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் மின்வாரியம் அருகில் நன்னிலம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமாக ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் மறைத்து சோதனை செய்தனர் . மோட்டார் சைக்கிளில் நீண்ட அரிவாள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து இருவரையும் விசாரணை செய்ததில் ஆடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ், வீரமணி என்பதும் இவர்களின் சகோதரி கணவரை பழிவாங்குவதற்காக ராசா கலிப்பூருக்கு சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story