சரக்கு வேன் மீது கார் மோதி விபத்து

சரக்கு வேன் மீது கார் மோதி விபத்து

கோப்பு படம்

கரூர்.அருகே கார் மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி,சின்ன கிருஷ்ணாபுரம் அருகே உள்ள எஸ் எஸ் ரெசிடென்ஸி பகுதியைச் சேர்ந்தவர் ஜலாவூதீன் (49). இவரது மகன் முகமது ஜியாவுல் காதர். இவர்கள் இருவரும், இவர்களுக்கு சொந்தமான காரில் மே 24ஆம் தேதி மாலை 5 :10 மணி அளவில், திண்டுக்கல்- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, தடா கோவில் பிரிவு அருகே வந்த போது, திருச்சி மாவட்டம், தொட்டியம், காடுவெட்டி அருகே உள்ள அணைக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்வேல் என்பவர், வேகமாக ஓட்டி வந்த மகேந்திரா பிக்கப் வேன், ஜலாவுதீன் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், காரில் பயணித்த ஜலாவூதீன் மற்றும் அவரது மகன் முகமது ஜியாவுல் காதிர் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜலாவுதீன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அருண்வேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags

Next Story