திருக்கோவிலூர் பகுதியில் மாடு திருடிய இரண்டு பேர் கைது

திருக்கோவிலூர் பகுதியில் மாடு திருடிய இரண்டு பேர் கைது

மாடு திருடியவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் மாடுகளை திருடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மணம்பூடியைச் சேர்ந்தவர் ராஜா, இவருக்கு சொந்தமான 3 மாடுகளை மேய்ச்சலுக்காக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கட்டி வைத்திருந்தார். கடந்த 1ம் தேதி காலை சென்று பார்த்தபோது, 2 மாடுகளைக் காணவில்லை. ராஜா அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கீழத்தாழனுார் காளி, ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story