அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் பலி

அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் பலி
இருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், பொம்மாடிமலை பகுதியில் அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மாடிமலை கடைவீதியில் அம்மாசத்திர பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி, கணேசன் ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பொம்மாடிமலை கடைவீதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பூவாலூர் பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து ரங்கசாமி, கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணேசன் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது சம்பந்தமாக கீரனூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கீரனூர் காவல்துறையினர் விபத்தில் மரணம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறுவாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ரங்கசாமியின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விபத்து குறித்தான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story