ஆத்தூர்: சாலை விபத்தில் சிறுவன் உட்பட இருவர் படுகாயம் !

ஆத்தூர்: சாலை விபத்தில் சிறுவன் உட்பட  இருவர் படுகாயம் !

அரசு மருத்துவமனை

ஆத்தூர் உடையார் பாளையம் பகுதியில் சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதி விபத்து சிறுவன் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் மூன்றாவது ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் 24 இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கோரிக்கை சேர்ந்த சதீஷ் மகன் ரித்திஷ் 12 என்ற சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது அம்மம்பாளையத்தில் இருந்து செல்லியம்பாளையம் நோக்கி டைல்ஸ் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தூக்கி வீசப்பட்டு சிவக்குமார்(24) ரித்தீஷ் குமார் (12) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர் இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story