வெள்ளிச்சந்தையில் பைக்குகள் மோதல்

வெள்ளிச்சந்தையில் பைக்குகள் மோதல்
விபத்து 
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிசந்தை பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் ,குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவதாணு (61). இவரது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சிவதாணுவும் அவரது நண்பர் பாலப்பள்ளத்தை சேர்ந்த சிவராஜ் (63) என்பவரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

வெள்ளமோடி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த பெரிய விளையை சேர்ந்த ஆஸ்டின் விவேக் (30) என்பவர் ஓட்டி வந்த பைக் சிவதாணு, செல்வராஜ் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். இதில் காயமடைந்த இருவரும் சிவதான ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் ஆஸ்டின் விவேக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story