மது கடையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

மது கடையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய பகுதியில் மது கடையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய பகுதியில் மது கடையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் pm ஒரு பகுதியாக இன்று 14.06.2024 தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கருவாட்டு சந்தை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட பெருங்கடம்பலூர் வேலு மகன் செந்தில்குமார் (50) பன்னீர்செல்வம் மகன் காரல்மார்க்ஸ் (34) என்ற நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 50 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 100 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வெளிமாநில மது, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங்,தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story