பெண்ணிடம் செயின் திருடி சென்ற இருவர் கைது

பெண்ணிடம் செயின் திருடி சென்ற இருவர் கைது
பெண்ணிடம் செயின் திருடி சென்ற இருவர் கைது
தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் திருடி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தாம்பரம் அருகே வரதராஜபுரம், ராயப்பா நாகம்மாள், 68. இவர் பிப். , 22 ம் தேதி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் இண்டர் நெட் இணைப்பு கொடுக்க வந்ததாக கூறி வீட்டின் உள்ளே நுழைந்து, ள்ளனர். அப்போது, நாகம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து புகாரையடுத்து சோமங்கலம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். இதில், செயின் பறிப்பில் ஈடுப்பட்டது, கூடுவாஞ்சேரியில், இறைச்சி கடையில் வேலை செய்யும் விஷ்ணு, 24, விஜயர், 23, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது 5 சவரன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story