மரம் வேரோடு சாய்ந்து இரண்டு இருசக்கர வாகனம் சேதம்!

மரம் வேரோடு சாய்ந்து இரண்டு இருசக்கர வாகனம் சேதம்!

ஆம்பூர் ராஜிவ்காந்தி சிக்னல் அருகில் தற்போது அடித்த சூறாவளி காற்றில் மரம் வேரோடு சாய்ந்து இரண்டு இருசக்கர வாகனம் சேதமடைந்தது.


ஆம்பூர் ராஜிவ்காந்தி சிக்னல் அருகில் தற்போது அடித்த சூறாவளி காற்றில் மரம் வேரோடு சாய்ந்து இரண்டு இருசக்கர வாகனம் சேதமடைந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராஜிவ்காந்தி சிக்னல் அருகில் தற்போது அடித்த சூறாவளி காற்றில் மரம் வேரோடு சாய்ந்து இரண்டு இருசக்கர வாகனம் சேதம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொது மக்கள்! திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகின்றது இந்நிலையில் தற்போது ஆம்பூர் தேசிய நான்கு வழி சாலை ராஜீவ் காந்தி சிக்னல் அருகில்அடித்த சூறாவளி காற்றில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனம் சேதமானது! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பொதுமக்கள்! இதேபோல் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் தென்னை மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் 5 மனி நேரம் மன்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story