இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !
X

உயிரிழப்பு 

பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் சென்ற போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவர் பலியனார்.
பழனி அடுத்த பெரியகலையமுத்தூரைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி (48). இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று டூவீலரில் பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதியது கொண்டது. இதில் பலத்த காயமடைந்த கோட்டைச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story