டூவீலர் விபத்து

திண்டுக்கல்லில் டூவீலர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தார்.
டூவீலரில் செல்லும்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. மூதாட்டி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி பாப்பாத்தி வயது 59. இதே போல கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், நாச்சியப்பகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஞானசேகர் வயது 47. இவர்கள் இருவரும் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 9 மணி அளவில், உப்பிடமங்கலத்தில் இருந்து வெள்ளியணை செல்லும் சாலையில் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.பாப்பாத்தி டூ வீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள வேலாயுதம்பாளையம் சரக்கு பாலம் அருகே சென்ற போது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டு இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாப்பாத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பாப்பாத்தியின் உறவினர் மற்றொரு ஞானசேகரின் மனைவி மங்கை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக, டூவீலரை கவனக் குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஞானசேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story