இருசக்கர வாகன விபத்து: இன்சூரன்ஸ் தொடர்பாக வழக்கு

இருசக்கர வாகன விபத்து: இன்சூரன்ஸ் தொடர்பாக வழக்கு

திருவாரூரில் இருசக்கர வாகன விபத்தில் இன்சூரன்ஸ் பெறுவது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.


திருவாரூரில் இருசக்கர வாகன விபத்தில் இன்சூரன்ஸ் பெறுவது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குடவாசல் தாலுக்கா திருவிழிமிழலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பிரியா. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி இரு சக்கர வாகன விபத்து இன்சூரன்ஸ் தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 5ஆம் தேதி வழக்கு விசாரணை முடிந்து விபத்து வாகன பழுது நீக்கம் செய்த செலவு தொகை ரூபாய் 22,448 மன உளைச்சலுக்காக ரூபாய் 30,000 வழக்கு செலவு தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் அளிக்க ஆணையம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story