டூவீலர் விபத்து; இருவர் படுகாயம்

ஏமூர் அருகே நடந்த டூவீலர் விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.

ஏமூர் அருகே டூவீலர்கள் மோதல். பெண் உள்பட இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பாரதிராஜா. வயது 31. இவரது தாயார் செல்வி வயது 45. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் ஜனவரி 2ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம், ஏமூர் கந்தன் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் மாவட்டம், புலியூர்,அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 61 என்பவர், ஓட்டி வந்த டூ வீலர் பாரதிராஜா ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில், பாரதிராஜா ஓட்டிய வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த அவரது தாயார் செல்விக்கும், பாரதிராஜாவுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரிலுள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய முதியவர் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.

Tags

Next Story