டூவீலர் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து !

டூவீலர் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து !

காவல்துறை 

டூவீலர் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
டூவீலர் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, புஞ்சை புகலூர், பசுபதி நகர், திலகா காம்ப்ளக்ஸ் 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ரிஷிகேஷ் வயது 15. ரிஷிகேஷ் மார்ச் 20 ஆம் தேதி காலை எட்டு மணி அளவில், அவரது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தில், புஞ்சை புகழூரில் இருந்து புகலூர் செல்லும் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூ வீலர் கௌதமபுரம் கம்யூனிட்டி ஹால் அருகே வந்தபோது எதிர் திசையில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர், வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் வயது 41 என்பவர் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த ஆட்டோ, சிறுவன் ரிஷிகேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுவன் ரிஷிகேஷ் க்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சிறுவன் ரிஷிகேசன் தந்தை ரமேஷ் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆட்டோவை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story