பரமத்தி வேலூர் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

பரமத்தி வேலூர் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

இருசக்கர வாகனம் திருட்டு

பரமத்தி வேலூர் அருகே இரு சக்கர வாகனம் திருடி சென்ற நபரை விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). இவர் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி உள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்பையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வு செய்த போது மர்மநபர் ஒருவர் அந்த பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சி பதிவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story