டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து !

டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து !

விபத்து

புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புலியூர் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, ஒத்தையூர் அருகே உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் சேகர் வயது 40. இவர் ஏப்ரல் 8-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் புலியூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, TN 09 CM 2655 என்ற எண் கொண்ட மாருதி எர்டிகா கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும்,விபத்தை ஏற்படுத்திய அந்த கார் டிரைவர், மின்னல் வேகத்தில் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். இந்த விபத்தில் சேகருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த சேகரின் உடன் பிறந்த சகோதரர் கதிரேசன் வயது 42 என்பவர், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த காரின் ஓட்டுனர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story