சரக்கு வாகனம் மீது டூ வீலர் மோதி விபத்து - ஒருவர் படுகாயம் !

சரக்கு வாகனம் மீது டூ வீலர் மோதி விபத்து - ஒருவர் படுகாயம் !

வழக்கு பதிவு

முன்னே சென்ற சரக்கு வாகனம், சிக்னல் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
முன்னே சென்ற சரக்கு வாகனம், சிக்னல் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், மாதேசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 52. இவர் ஏப்ரல் மூன்றாம் தேதி மாலை மூன்றே முக்கால் மணியளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், நாணப்பரப்பு லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, இவருக்கு முன்பாக டிஎன் 88 எக்ஸ் 6483 என்ற எண் கொண்ட டாட்டா ஏஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்திலிருந்து முறையாக எவ்வித சமிக்கைகளும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டதால் சுப்ரமணி ஓட்டிச் சென்ற டூவீலர் டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணிக்கு தலை, கால்கள், கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டாட்டா ஏஸ் வாகனத்தை முறையாக ஓட்டாமல், முறை தவறி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக, வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story