நெல் மூட்டைகளில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

நெல் மூட்டைகளில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

வாலிபர் உயிரிழப்பு 

சாலையில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் மணல்மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் நேரு (38). இவர் பழைய கரியப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வல்லம் - திருவையாறு புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, வண்ணாரப்பேட்டை பாலம் பகுதியில் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த நேரு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வல்லம் காவல்துறையினர் அங்கு சென்று, நேருவின் சடலத்தை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story