டூவீலர்கள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம் !

டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயமடைந்த நபர் வேகமாக வாகனத்தை ஓட்டியதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டூவீலர்கள் மோதி விபத்து. கணவன் படுகாயம். மனைவி புகார்.க.பரமத்தி காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, சேங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி வயது 59. இவரது மனைவி செல்வராணி வயது 51. இவர்கள் இருவரும் மார்ச் 11ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவர்களுக்கு சொந்தமான எலக்ட்ரிக் பைக்கில் சென்றனர். இவர்களது வாகனம் சூரியம்பாளையம் பகுதியில் உள்ள தர்ஷிகா கஃபே அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், அதே சாலையில் வந்த மற்றொரு டூவீலர் மீது ராஜாமணி ஒட்டிய எலக்ட்ரிக் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜாமணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story