டூவீலர் மோதி விபத்து : பெண் உயிரிழப்பு.

நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்தில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. பெண் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி வயது 49. இவர் மே 6ம் தேதி இரவு 9 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள வேலு மில் அருகே நடந்து சென்ற போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம்,புலியூரை அடுத்த மேலப்பாளையம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த தர்மதுரை வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற சரஸ்வதி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சரஸ்வதி. இந்த சம்பவம் குறித்து சரஸ்வதியின் கணவர் பழனிவேல் வயது 55 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சரஸ்வதியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமான தர்மதுரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story