சாலை தடுப்பின் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

சாலை தடுப்பின் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர் மதுரை சாலையில் இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

விருதுநகர் மதுரை சாலையில் இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் சுந்தரி பாளையம் பகுதியைச் சார்ந்தவர் சந்தோஷ வயது 26 இவர் நாகர்கோயிலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது இவருடன் பணிபுரியும் பாலாஜி என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு வேலை நிமித்தமாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு மதுரையிலிருந்து நாகர்கோவில் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார் அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த பாலாஜி காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் இந்த சம்பவம் குறித்து காயமடைந்த பாலாஜியின் தாய் அளித்த புகார் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story