திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி!

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விருது கட்ட பரப்புரையாக 1000 திற்கும் மேற்பட்டோர் கனவு கண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இறுதி கட்டப்பரப்புரையாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.. தமிழகத்தில் முதற்கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாகன பேரணி நடைபெற்றது.

திருப்பூர் காந்திநகர் பகுதியில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணியானது திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளை மையப்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டனர்.

நிறைவாக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த பேரணியில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக கூடிய நிலையில் திருப்பூர் வளர்ச்சி திட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறக்கூடிய வேட்பாளராக தன்னை தாமரை சின்னத்திற்கு வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என ஏ பி முருகானந்தம் கேட்டுக்கொண்டார். இந்த இருசக்கர வாகன பேரணியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story