நெமிலியில் டூ வீலர் திருட்டு

நெமிலியில் டூ வீலர் திருட்டு

காவல் நிலையம் 

நாதஸ்வர கலைஞரின் டூவீலர் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலியை அடுத்த அகவலம் கிராமத்தை சேர்ந்தவர் நாதஸ்வர கலைஞர் முருகன் (51).இவர் நெமிலி பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவரும் அக்னி வசந்த விழாவில் நாதஸ்வரம் இசைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் இவர் தன்னுடைய டூ வீலரை கோவில் அருகே நிறுத்திவிட்டு சாமி வீதியுலா நிகழ்ச்சிக்கு இசை வாத்தியம் இசைக்க சென்றுள்ளார்.பின்னர் வீதி உலா முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு தன்னுடைய டூ வீலரை எடுக்க வந்தபோது அது திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story