ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு - உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்

ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு - உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலைய போலீசார் வழக்கு 

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை காணவில்லை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்
மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ரமேஷ் குமார், வயது 30 . இவர் தனக்கு சொந்தமான யமஹா ஃபேசினோ ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை புல்லலக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் முன்பு நிறுத்தி வைத்துவிட்டு மருத்துவமனைக்குள் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story