டூ வீலர்கள் மோதல்; முதியவர் படுகாயம்

டூ வீலர்கள் மோதல்; முதியவர் படுகாயம்
எம்ஜிஆர் நகரில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே எம். லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் வயது 70. இவர் ஜூன் 12-ம் தேதி மதியம் 12 மணியளவில், தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட, எம் ஜி ஆர் நகர், பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே சாலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சௌந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் வயது 23 என்ற இளைஞர் ஓட்டி சென்ற டூவீலர், ராமன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த ராமனுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமன் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Tags

Next Story