டூவீலர்கள் மோதல் - இருவர் படுகாயம்.

டூவீலர்கள் மோதல் - இருவர் படுகாயம்.

வெள்ளியணை காவல் நிலையம் 

ஒத்தையூர் பெட்ரோல் பங்க் அருகே டூவீலர்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்கா, சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 20. இவருக்கு சொந்தமான டூவீலரில் அக்டோபர் 24ஆம் தேதி காலை 7 மணி அளவில் கரூர்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒத்தையூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி, டி.களத்தூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி வயது 40 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் ஹரிஹரன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹரிஹரனுக்கு வலது கையிலும், வீராசாமிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம்,கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஹரன் வெள்ளியணை காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில் அக்டோபர் 27ஆம் தேதி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாக டூவீலரை ஓட்டி விபத்து ஏற்பட காரணமான வீராசாமி மீது வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags

Next Story