குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

பைல் படம் 

கும்பகோணத்தில் குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது கும்பகோணம் பழைய பாலக்கரைச் சோ்ந்த சக்திவேல் மகன் காா்த்திகேயன் (21), சரவணன் மகன் உதயகுமாா் (25) ஆகிய 2 பேரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனா். இதனால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதன்படி, காா்த்திகேயன், உதயகுமாரை காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.



Tags

Next Story