பெண்ணாடத்தில் நிழற்குடை வழங்கும் நிகழ்வு

பெண்ணாடத்தில் நிழற்குடை வழங்கும் நிகழ்வு

நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் இளைநீர் கடை உரிமையாளருக்கு நிழற்குடை வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் பெண்ணாடம் ஆதன் பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள் அருண்மொழி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பெண்ணாடம் பழைய பேருந்து நிறுத்தத்தில் நடை பாதையில் மிதிவண்டியில் இளநீர் விற்பனை செய்யும் மாளிகைக் கோட்டம் இராஜாவிற்கு நிழற்குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத் தலைவர் மேழிச்செல்வன் , தலைவர் தேர்வு சக்திவேல், செயலாளர் தேர்வு சக்தி சபரீஷ் , பொருளாளர் தேர்வு பாண்டியன் , முதல் துணைத் தலைவர் தேர்வு அழகுவேலன் , இரண்டாம் துணைத் தலைவர் தேர்வு வெங்கடேஸ்வரன், அருண்மொழி, அ.விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story